பாதி பேர் தோரணம் கட்டுறாங்க, பாதி பேர் கிழிச்சி தொங்க விடுறாங்க இது எப்போதும் நடக்குறது தானே விட்டுடலாம் அப்பிடின்னு நினைச்சா கார்க்கியின்
இந்த பதிவு படத்துல செல்வா என்ன தான் பண்ணி இருக்கார்னு பார்க்கணும்னு ஒரு ஆவலை தூண்டி விட்டுச்சு. தாரணி அக்காவோட பதிவ பார்த்த அப்புறம் இந்த படத்த நாம பார்த்தே ஆகணும்னு வெறியே வந்துடுச்சு. (தாரணி அக்கா பிட்டு போதுமா?)
எந்த படத்துக்கும் என்னோட எண்ணங்களை எழுதணும்னு தோணல. ஆனா ஆளாளுக்கு என்கிட்ட பேசினதுக்கு அப்புறம் எனக்கு எழுதணும்னு தோணிடுச்சு. தமிழ் சினிமாவில் இது ஒரு மிக பெரிய முயற்சி, trend மாத்திடும் அப்படி இப்படின்னு ஒரு நாலஞ்சு பேர் என்கிட்ட சண்டை போட்டாங்க அவங்க சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்ல. தசாவதாரம் கூட ஒரு முயற்சி தான். ஏன் பருத்தி வீரன், நாடோடிகள், சுப்ரமணியபுரம் இதுலாம் கூட நல்ல முயற்சிகள் தான். கதை களம் வேற மாதிரி இருக்குனா அன்பே சிவம், ஹேராம் ரெண்டு படமும் வித்தியாசமான கதை களம் இல்லையா? பணத்தை கொட்டி, நெறையயயயயயயய துணை நடிகர்கள வைச்சு, இப்படிலாம் படம் எடுத்தா அது தான் மிக பெரிய முயற்சின்னு என்னால ஒத்துக்க முடியல.
தசாவதாரத்தை கமலுக்காக வீணாக்கிட்டாங்க. அதே மாதிரி செல்வாவோட அபாரமான உழைப்பு அவராலேயே வீணாயிடுச்சுன்னு தான் எனக்கு தோணுது.
இத்தனை பேரோட உழைப்பை கொட்டி, பணத்தை கொட்டி எடுத்த முயற்சியில் லாஜிக் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஏகப்பட்ட லாஜிக் சொதப்பல். மிக பெரிய சொதப்பல் அழைத்தவுடன் வந்திறங்கும் ராணுவ வீர்கள். நாமலே இதை யோசிக்கும் போது செல்வா எப்படி இதை யோசிக்காமல் விட்டார். இல்லை படத்தை பிரம்மாண்டமாக கொடுத்தால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள் என்று நினைத்தாரா.
ரீமா நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா இந்த திமிர் தனத்த வல்லவன் படத்துலையே பார்த்தாச்சு. இதுல அழகா இருக்காங்க. வல்லவன்ல
எப்பிடி இருந்தாங்கன்னு தனியா வேற சொல்லனுமா? அது தான் பெரிய வித்தியாசம்.
பார்த்திபனின் நடிப்பு அபாரம். அவரின் அறிமுகத்தில் இருந்து இறுதி வரை ஆஹா மிக அற்புதம். எதுக்காக ஆண்ட்ரியா? இப்போது வரை புரியவில்லை.
கார்த்தி என் மச்சானோட தம்பியா இருந்துகிட்டு இந்த படத்துக்காக இத்தன நாட்களை வீணாக்கிட்டார். அது செல்வாவை நம்பி என்றால் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.
கதை புரியவில்லை என்று நிறைய பேர் சொல்லிட்டாங்க. புரியாம போக அப்படி எதுவும் இல்லையே. அதுவும் இல்லாமல் அந்த கொடுமையான காட்சிகள் எல்லாம் தெள்ள தெளிவாக அவர் எதை பற்றி சொல்கிறார் என்று தெரிகிறதே. எனக்கு அந்த காட்சிகளை பார்த்தப்போ ஏன் கற்பனைன்னு போட்டாங்கன்னு தோணுச்சு?
பாடல்கள் எல்லாம் ரிலீஸ் ஆனப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சது. பாடல்கள் பிடிக்காத என் தோழிகளிடம் படம் வரட்டும் பாரு, கண்டிப்பா நல்லா படமாக்கி இருப்பார் செல்வான்னு சொன்னதும் தப்பா போச்சு. ஒன் மேல ஆசை தான் பாட்டு மட்டும் பார்க்க ஆறுதல்.
பின் பாதியில் சில இடங்களில் எனக்கு G.V. பிரகாஷிடம் கொஞ்சம் நேரம் நிறுத்துப்பா, முடியல என்று சொல்லணும் போல ஆய்டுச்சு.
ரீமாவின் virgin செக்கப், மனம் பிறழ்ந்து நடிக்கும் காட்சி, பார்த்திபனின் முடிவு என ஒவ்வொன்றிலும் இது என் படம் என்று செல்வா சொல்வது தெரிகிறது. பாலாவும் செல்வாவும் இந்த மாதிரி காட்சிகளை எடுப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று நான் நினைப்பதுண்டு. மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது.
ஆனால் இத்தனையையும் மீறி அந்த நடராஜர் நிழல், போர்கள காட்சிகள்ன்னு நல்ல விசயங்கள் இருக்கின்றன. என்ன ஒரு creativity, அட என்று சொல்ல வைத்தது அந்த நடராஜர் நிழல் காட்சி. போர்கள காட்சியில எல்லோரும் சேர்ந்து நின்னு தாக்கும் இடத்தில் அதகளம் பண்ணி இருக்கார். அதே போல எல்லோரும் சொல்வது போல் எனக்கு வன்முறைகள் அதிகம் இருப்பதாக தெரியவில்லை. கதைப்படி பார்த்தால் சரியான படி தான் கொடுத்திருக்கிறார்.
செல்வா எனக்கு பிடிக்காது, இது செல்வாவோட படம் அப்பிடிங்கிற என்னோட எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு தான் இந்த படம் பார்த்தேன். 7G, காதல் கொண்டேன் பார்த்த பிறகு இருந்த கடுப்பு இப்போது இல்லை. ஆனால் படம் அவசரத்தில் அள்ளி தெளித்த கோலம் போல் ஆகி விட்டது. என்னை பொறுத்த வரை, மூன்று இல்லை இன்னும் மூன்று வருடங்கள் சேர்த்து எடுத்து கொண்டு படத்தை நேர்த்தியாக கொடுத்திருக்கலாம்.
நேத்து இந்த படத்தை பார்த்து விட்டு அந்த நடராஜர் நிழல் மற்றும் போர் காட்சிகளை நினைத்து எந்த அளவில் பிரம்மிப்பில் இருக்கின்றேனோ அதே போன்று ஒரு வித எரிச்சலையும் கொடுத்து விட்டது இது உலக படத்திற்கான முயற்சி என்ற வார்த்தைகள்.
முயற்சிகளை தட்டி கொடுத்து பாராட்ட வேண்டும், உண்மை தான், ஆனால் இத்தனை விசயங்களை பார்த்து விட்டு இது தான் தமிழ் படத்துக்கு மிக பெரிய மாற்றம், லாஜிக் பார்க்க கூடாது அப்படி இப்படி என்று மறுபடியும் என்கூட சண்டை போடணும்னா வாங்க போடலாம் :)
பின் குறிப்புகள்:
1. இந்த படத்துல பாட்டை நல்லா படமாக்கி இருப்பார்னு சொல்லி வாங்கி கட்டிகிட்டேன். ஆனா தல உங்கள, உங்க அசல் படத்த நம்பி நான் பெட் கட்டி இருக்கேன். நமக்கு புது முயற்சி, உலக படம்லாம் வேணாம் தல. அசல் படம் என் முதல (பெட் கட்டி தொலைச்சிட்டேன்) மோசம் பண்ணாம வந்துச்சுனா போதும் தல.
2. அசல் படம் ஒரு வேலை நல்லா இல்லேன்னா வேட்டைக்காரன் என்ற வார்த்தையை அசல் என்ற வார்த்தையாலும், விஜய் என்ற வார்த்தையை தல என்ற வார்த்தையாலும் replace பண்ணி அனுப்ப நெறைய மெசேஜ் ரெடியா வைச்சிருக்காங்க. ப்ளீஸ் தல ...
3. அசல் படம் நல்லா இருந்தா மட்டும்
Synapse இல் விமர்சனம் வரும். இல்லேன்னா ப்ரியா அக்கா அத கண்டுக்காம விட்ருவாங்க.